மலரொன்று வாடியதற்கா ?
மனமொன்று வாட்டியதற்கா ?
தினமொன்று கழிந்தற்கா ?
தினம் சோகம் தொடர்வதற்கா ?
அலை வந்து தீண்டியதற்கா ?
அதுவும் விட்டுப் போனதற்கா ?
ஒளி வந்து எழுப்பியதற்கா ?
இருள் வந்து சூழ்ந்ததற்கா ?
ஒலி கேட்டு அஞ்சியதற்கா ?
ஓலம் கண்டு ஓடுவற்கா ?
கட்டியழும் தனிமையிடம்
எதற்க்கிந்த சோகமென்றேன் ?- அதுவும்
விட்டொழிந்து போனதுவே
விடியலொன்றைத் தேடி
தொடரும் என் பயணங்கள்.