பூ பறித்து போகும் செல்லையா-எனை
ஆர்பரித்து போவதேன் சொல்லையா
குண்டு மல்லி பறிச்செடுக்க
கூடையுந்தான் நிறைஞ்சிருக்க-நானும்
அரை குடமா தளும்புறேனே
அல்லாடி நிக்குறேனே
ஆத்தோரம் போறவரே - நெஞ்ச
அணை கட்டி போவிரோ
தோப்போரம் நான் வரவா -பூவும்
தொடுத்தெடுத்து நான் தரவா
காதோரம் சேதி சொல்லி
காத்தாட்டம் போறவரே
காதல் சூதாட்டம் ஆடுறியே-என்
கண்ண கட்டி ஓடுறியே.
கோத்தெடுத்த மாலையுந்தான்
கோவமாத்தான் பாத்திடுதே..
சாளரத்த சேர்த்தணைச்சா
சாந்தி பெருமா எம்மனசும்.