கொஞ்சல் பேச்சில்
கெஞ்சலில் நிற்கும்
வெட்கம்.
குளிரெடுத்தும்
சிலிர்க்காத உடம்பு
உன் குரல் கேட்டு
சிலிர்க்கிறதே
பேனா எழுதும்
வார்த்தைகளை கூட
பேதை என்னால்
பேச முடிவதில்லை.
எல்லாக் கனவுமே
நிறைவேறியதாய்
நினைவேயில்லைதான்
உன்னை பார்க்கும் போதும்.
கண்ணாடி முன்பு
நின்று விடாதே
காட்டிக்கொடுத்துவிடும்
உன்னில் எனை.
--திரைச்சீலை கூட
தினுசு தினுசாய் உடுத்துகிறது
எனை மட்டும் ஏன்
வெட்க ஆடை மட்டுமே
உடுத்தச்செய்கிறாய்.