பார்வையாலே கயிறு திரித்து
பம்பரமாய் சுழல வைத்தான்.
சுவாசத்தில் பொடி வைத்தே
சுத்திச் சுத்தி சுழல விட்டான்.
வார்த்தியிலே வசியம் வைத்து
வாழ்வே அவனென புலம்ப விட்டான்.
கன்னக்குழி இரண்டில் மயங்க வைத்தே
கதை கதையாய் பேச வைத்தான்.
கையசைவில் எனை அழைத்தே
கரகாட்டம் ஆடவைத்தான்.
நடை பழக விரல் பிடித்தே
நாட்டியத்தை பயிற்றுவித்தான்.
மவுனத்தின் பாஷை தனில்
மன்மதனாய் அம்பெய்தி...
மலங்க மலங்க விழிக்க வைத்தே
மறைந்தோடிப் போனானே ..!