இமையில் மை வைத்து
உனை இம்சிக்கும்
எண்ணமில்லை.
வேல் விழியால்
உனை அழைத்து
என்னுள் வீழ்த்திடும்
விந்தையுமறியேன்.
வில்லெனும் புருவத்தால்
க ணை தொடுத்தே..
கவர்ந்திடும் காந்தமுமில்லை.
தமிழில் கொஞ்சம்
வரியெடுத்து...-கிள்ளை
மொழி பேசி -பிள்ளையென
நானும் வந்தேன்.
கண்ணாளா நியும்
கண்ணால் கவி பேசி
கொங்கு தமிழாய்
எனை நேசிப்பாயோ?