விடையில்லா கேள்விகளே
விடைசொல்ல மாட்டாயோ?
இக்கரையில் தென்றலில்லை
அக்கரையில் புயல் மழையோ
காலத்தின் கைதிதானோ [விடை]
காலமெனும் கண்ணாடி
காட்டுகின்ற நிழலுருவில்
நீயென்ன பிறை நிலவோ
நீந்துவதுகண் நீரில்தானோ
பாலைதான் உந்தன்வீடோ![விடை]
ஆராட்டுப் பாடிய கைகள்
ஆசைவழிப் போனதாலே
சீராட்டிய இதயம் இங்கே
சிறகுவிரித்துப் போனதெங்கே
நெஞ்சத்தின் நிம்மதியெல்லாம்
கனவுகளின் சங்கமம் தானோ![விடை]
பாதைதேடிப் போகும் நெஞ்சில்
பாசங்கள் பனித்துளிப் போல
மாய்ந்தோடிப் போய்விடுமோ
மனமே மரணந்தான் உன்வழியோ
கனவே கலைந்தோடும் மேகமோ நீ![விடை]
ஆரம்பம் அழகாயில்லை
ஆசைகள் அலைகடலாக
ஆனந்த நாள் மலருமோ
காலம் கவிதைபாடுமோ
காட்சி மாலை சூடுமோ![விடை]
கலைந்தோடும் மேகம்போல
கடல் கலக்கும் நதியாய் நானும்
கரைந்தோடிப் போகின்றேன்
கரையெங்கே தேடுகிறேன்
கற்பூரமாய் எரிகின்றேன்[விடை]
விடைசொல்ல மாட்டாயோ?
இக்கரையில் தென்றலில்லை
அக்கரையில் புயல் மழையோ
காலத்தின் கைதிதானோ [விடை]
காலமெனும் கண்ணாடி
காட்டுகின்ற நிழலுருவில்
நீயென்ன பிறை நிலவோ
நீந்துவதுகண் நீரில்தானோ
பாலைதான் உந்தன்வீடோ![விடை]
ஆராட்டுப் பாடிய கைகள்
ஆசைவழிப் போனதாலே
சீராட்டிய இதயம் இங்கே
சிறகுவிரித்துப் போனதெங்கே
நெஞ்சத்தின் நிம்மதியெல்லாம்
கனவுகளின் சங்கமம் தானோ![விடை]
பாதைதேடிப் போகும் நெஞ்சில்
பாசங்கள் பனித்துளிப் போல
மாய்ந்தோடிப் போய்விடுமோ
மனமே மரணந்தான் உன்வழியோ
கனவே கலைந்தோடும் மேகமோ நீ![விடை]
ஆரம்பம் அழகாயில்லை
ஆசைகள் அலைகடலாக
ஆனந்த நாள் மலருமோ
காலம் கவிதைபாடுமோ
காட்சி மாலை சூடுமோ![விடை]
கலைந்தோடும் மேகம்போல
கடல் கலக்கும் நதியாய் நானும்
கரைந்தோடிப் போகின்றேன்
கரையெங்கே தேடுகிறேன்
கற்பூரமாய் எரிகின்றேன்[விடை]